Publish Date: Fri, 10 Nov 2023 (08:37 IST)
Updated Date: Fri, 10 Nov 2023 (08:39 IST)
சென்னையில் வரும் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை மாலை மற்றும் இரவு நேரங்களில் சிறப்பு மாநகர பேருந்து சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் 60 மாநகர சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறப்பு பேருந்துகளில் சொகுசு பேருந்து கட்டணம் வசூலிக்க போக்குவரத்துத் துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உரிய வழித்தட பெயர் பலகை சரிவரப் பொருத்தியும், பயண சீட்டுகள் 100% அதிகப்படுத்தியும் இயக்க அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.
அனைத்து மண்டல கிளை மேலாளர்களுக்கு, போக்குவரத்துத்துறை மேலாண் இயக்குநர் இதுகுறித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.