Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்கூட்டியே சிலை செய்ய ஆர்டர்! – மரணத்தை கணித்தாரா எஸ்பிபி?

Webdunia
திங்கள், 28 செப்டம்பர் 2020 (12:09 IST)
இந்திய பின்னணி பாடகரான எஸ்பிபி தான் இறந்து போவதற்கு சில மாதங்கள் முன்பாக தன்னை சிலையாக வடிக்க ஆர்டர் கொடுத்திருந்த சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.

இந்திய சினிமா பாடகரான எஸ்பி பாலசுப்ரமணியம் கொரோனா பாதிப்பால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிர் நீத்தார். அவரது உடல் நேற்று முந்தினம் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னராக தனது பெற்றோரின் சிலையை வடிக்க கிழக்கு கோதாவரி கொத்தப்பேட்டையை சேர்ந்த சிற்பி ராஜ்குமார் என்பவரிடம் ஆர்டர் செய்திருந்துள்ளார் எஸ்பிபி.

இந்நிலையில் தான் கொரோனா பாதிக்கப்படுவதற்கு முன்னதாக சிற்பி ராஜ்குமாரை தொடர்புகொண்ட எஸ்பிபி தன்னையும் சிலையாக வடிக்க வேண்டும் என ஆர்டர் செய்துள்ளார். அதற்கான புகைப்படங்களையும் மெயிலில் அனுப்பியுள்ளார். சிலையும் முழுவதுமாக செய்து முடித்துவிட்ட நிலையில் எஸ்பிபி உடல்நல குறைவால் உயிரிழந்ததாக சிற்பி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

திடீரென எஸ்பிபி தனக்கு சிலை செய்ய சொன்னது ஏன்? அவரது மரணம் குறித்து முன்னரே அவர் கணித்திருந்தாரா என்ற ரீதியில் சமூக வலைதளங்களில் கேள்விகள் உலா வரத் தொடங்கியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விழுப்புரம் வழியாக செல்லும் ரயில் சேவையில் மாற்றம்: முழு விவரங்கள் இதோ:

போராட்டத்தின்போது மயங்கி விழ்ந்த பெண் எம்பி.. கைத்தாங்கலாக பிடித்த ராகுல் காந்தி..

தூய்மை பணியாளர்கள் விஜய்யுடன் சந்திப்பு: தமிழக அரசியலில் பரபரப்பு

திருமங்கலம் பார்முலாவை கொண்ட திமுகவினர் ஜனநாயகம் குறித்து பேசுவதா? அண்ணாமலை கண்டனம்..!

யாருடனும் கூட்டணி இல்லை.. திருமா, வைகோ, விஜயகாந்த் செய்த தவறை நான் செய்ய மாட்டேன்: சீமான்

அடுத்த கட்டுரையில்
Show comments