Publish Date: Fri, 18 Feb 2022 (11:48 IST)
Updated Date: Fri, 18 Feb 2022 (11:49 IST)
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் பாதுகாப்புக்கு துணை இராணுவத்தை அழைத்து வர வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி திடீரென ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாளை நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது என்பதும் இந்த தேர்தலின் பாதுகாப்புக்காக தமிழக காவல்துறையினர் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு நடப்பதாக கூறி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் எஸ் பி வேலுமணி தனது ஆதரவாளர்களுடன் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தேர்தல் பணியில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தி எஸ் பி வேலுமணி உள்ளிட்ட அதிமுகவினர் மற்றும் சில எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது