Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 48 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்பு!

Webdunia
வியாழன், 2 ஜூன் 2016 (16:47 IST)
தமிழகத்தில் கத்திரி வெயிலின் காலம் மே 28-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றாலும், தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை நீடித்து வந்தது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதால் அடுத்த 48 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


 
 
கேரள மாநிலத்தில் மிக முக்கியமானதாக கருதப்படும் தென்மேற்கு பருவமழை வரும் ஜுன் 4 அல்லது ஜுன் 5-ஆம் தேதிகளில் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 
இது குறித்து செய்தி வெளியிட்ட வானிலை மையம், தமிழகத்தில் வெயில் படிப்படியாக குறையும் என்றும், அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகம், மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.
 
கேரளாவில் தென்மேற்கு பருவமழை வருகிற 6-ஆம்தேதி தொடங்கும் என கொச்சியில் உள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் CHATGPT, DeepSeek ஏஐ பயன்படுத்த கூடாது: மத்திய நிதி அமைச்சகம் தடை

தொங்கு சட்டசபை ஏற்பட்டால் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு இல்லை: காங்கிரஸ் அறிவிப்பு..!

கடன் வாங்கியது ரூ.6000 கோடி.. வங்கிகள் வசூலித்தது ரூ.14000 கோடி.. விஜய் மல்லையா வழக்கு..!

18 ஊழியர்களை திடீரென நீக்கிய திருப்பதி தேவஸ்தானம்.. என்ன காரணம்?

டெல்லியில் நடைபெறும் திமுக ஆர்ப்பாட்டம்.. ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments