Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை! இந்த ஆண்டு செம மழை! - வானிலை ஆய்வு மையம்!

Prasanth Karthick
புதன், 21 மே 2025 (08:52 IST)

தென்மேற்கு பருவமழை திட்டமிட்ட நாளுக்கு முன்னதாகவே தொடங்க உள்ளதால் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 

தமிழ்நாட்டில் கோடைக்காலம் நடந்து வந்த போதும் ஆங்காங்கே பெய்த கனமழையால் சில்லென்ற சூழல் நிலவியது. வெயிலின் தாக்கம் கடந்த ஆண்டு அளவுக்கு உயராமல் மழை பார்த்துக் கொண்ட நிலையில், தற்போது தென்மேற்கு பருவமழைக் காலமும் தொடங்க உள்ளது. இதனால் வெப்பநிலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தென்மேற்கு பருவமழை 27ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே மழை தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் அடுத்த 4 அல்லது 5 நாட்களில் பருவமழை தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தின் சில பகுதிகளிலும் மழைப்பொழிவு இருக்கும். 

 

மத்தியக் கிழக்கு அரபிக் கடலில் இன்று புதிய வளிமண்டல சுழற்சி உருவாக உள்ளதாகவும், இது நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து வலுவடையக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

48 மணி நேரத்தில் 15 ஆயிரம் குழந்தைகள் சாகப் போகிறார்கள்! காசாவை காப்பாற்றுங்கள்! - ஐ.நா வேண்டுகோள்!

சீனா சென்ற பாகிஸ்தான் துணை பிரதமர்.. வரவேற்க ஆளே இல்லாமல் அவமரியாதை..!

பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுக்கும் ஆப்கானிஸ்தான்.. பாலைவனம் ஆகிறதா பாகிஸ்தான்?

பிச்சைக்காரர் போல் தோற்றம்.. ஆனால் பாகிஸ்தானுக்கு ரூ.15 கோடி அனுப்பிய மர்ம நபர்.. போலீஸ் அதிர்ச்சி..!

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments