Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்மேற்கு பருவமழை தொடக்கம்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

Mahendran
செவ்வாய், 13 மே 2025 (16:11 IST)
தென்மேற்கு பருவமழை இன்று  அந்தமானில் தொடங்கியதை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மே 20ஆம் தேதி அந்தமான் கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். இது கேரளாவில் ஜூன் 1ஆம் தேதி தொடங்குவது இயல்பு. ஆனால், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்னதாகவே தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று அந்தமானில் தொடங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
இதையடுத்து, திண்டுக்கல், தேனி, நீலகிரி, திருப்பூர், கோவை ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 
அதேபோல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மேகமூட்டம் காணப்படும். பகல் நேரத்தில் அதிகபட்ச வெப்பம் நிலவும் என வானிலை மையம் மேலும் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று வெளுத்து கட்டப்போகும் மழை.. சென்னைக்கு எச்சரிக்கை..!

திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 40 மட்டுமே பரிசீலனையில் உள்ளன: அமைச்சர் தங்கம் தென்னரசு

ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், சசிகலாவை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் திட்டமா? புதிய அதிமுக உதயம்?

டிரம்பிடம் இந்தியாவுக்கு 50% வரி போட சொன்னதே பிரதமர் மோடி தான்: ஆ ராசா

அடுத்த கட்டுரையில்
Show comments