Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் நிலைய அதிகாரிகள் தமிழில் பேசக்கூடாது: தெற்கு ரயில்வே அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 14 ஜூன் 2019 (10:54 IST)
தெற்கு ரயில்வேயில் பணிபுரியும் நிலைய அதிகாரிகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே பேச வேண்டும் என்னும் புதிய அறிக்கை அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் மதுரை திருமங்கலத்தில் இரண்டு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே வந்தன. ரயில் ஓட்டுநர் உஷார் அடைந்து வண்டியை நிறுத்தியதால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

விசாரணையில் ஓட்டுநருக்கும், நிலைய கட்டுபாட்டு அதிகாரிக்கும் இடையே ஏற்பட்ட மொழி பிரச்சினையே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் தெற்கு ரயில்வே ஒரு சுற்றறிக்கையை அனைத்து ரயில் நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளது. அதில் நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளை கோட்ட கட்டுப்பாட்டு அதிகாரிகள் தொடர்பு கொள்ளும்போது ஆங்கிலம் அல்லது இந்தியிலேயே பேச வேண்டும். மாநில மொழிகளில் தகவல் பரிமாற்றம் செய்யக்கூடாது என்று கூறியுள்ளது. இந்த சுற்றறிக்கை ரயில்வே அதிகாரிகளிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments