தொடங்கியது தென்மேற்கு பருவமழை : வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Webdunia
வியாழன், 8 ஜூன் 2023 (15:28 IST)
அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் சற்று முன் கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் 20ஆம் தேதி தொடங்கிவிட்டது. கேரளாவில் ஜூன் ஒன்றாம் தேதி தென்மேற்கு பருவ மழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு வாரம் தாமதமாக தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
கேரளா, தென் தமிழ்நாடு, மன்னார் வளைகுடா பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - ராமேஸ்வரம் 7.5 மணி நேரத்தில்.. விரைவில் தொடங்குகிறது வந்தே பாரத் ரயில் சேவை..

SIR படிவத்தை முழுமையாக நிரப்பாவிட்டால் நிராகரிக்கப்படுமா? தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்..!

5 வயது சிறுமியை கடத்தி ரூ.90,000க்கு விற்பனை.. கடத்தியவர் யார் என்பதை அறிந்து பெற்றோர் அதிர்ச்சி..!

என் தந்தை உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை காட்டுங்கள்.. இம்ரான்கான் மகன் ஆவேச பதிவு..!

இறங்கிய வேகத்தில் திடீரென உயர்ந்த தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 560 ரூபாய் உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments