Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரியங்கா காந்தி பதவி விலகுகிறாரா? காங்கிரஸ் தொண்டர்கள் அதிர்ச்சி..!

Webdunia
வியாழன், 8 ஜூன் 2023 (15:23 IST)
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து பிரியங்கா காந்தி விலக இருப்பதாக கூறப்படுகிறது. 
 
கடந்த ஆண்டு உத்தரபிரதேசம் மாநிலத்தில் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற்ற போது காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் பொறுப்பாளராக பிரியங்கா காந்தி நியமனம் செய்யப்பட்டார். 
 
அவர் மீண்டும் உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்கு கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சி வெறும் இரண்டே இரண்டு தொகுதிகளில் மட்டும் தான் வென்றது என்பதும் முந்தைய தேர்தலை விட மோசமான தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் உத்தரபிரதேசம் தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து பிரியங்கா காந்தி விலக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. அவருக்கு பதிலாக உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஹரிஷ் ராகத் அல்லது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தாரிக் அன்வர் ஆகிய இருவரில் ஒருவருக்கு இந்த பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments