Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்காசி வழியாக தாம்பரம் சிறப்பு ரயில்? – எந்தெந்த நாட்களில் செயல்படும்?

Webdunia
ஞாயிறு, 18 செப்டம்பர் 2022 (09:01 IST)
திருநெல்வேலியிலிருந்து தாம்பரத்திற்கு தென்காசி வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயில் குறித்த அறிவிப்பை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் பல்வேறு வழித்தடங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் சில காலமாக திருநெல்வேலியிலிருந்து தாம்பரத்திற்கு தென்காசி வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வந்தது.

இந்த வாராந்திர சிறப்பு ரயில் சேவையை அடுத்த ஜனவரி மாதம் வரை நீட்டிப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ALSO READ: இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து முகமது ஷமி திடீர் நீக்கம்: அதிர்ச்சி காரணம்

அதன்படி இன்று முதல் வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் நெல்லை – தாம்பரம் சிறப்பு ரயில் (06004) இரவு 7.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.20க்கு தாம்பரம் சென்றடையும். அதுபோல மறுமார்க்கத்தில் தாம்பரம் – நெல்லைக்கு திங்கட் கிழமைகளில் தாம்பரத்திலிருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.40க்கு திருநெல்வேலி வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, மதுரை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி, அம்பை, சேரன்மாதேவி ரயில் நிறுத்தங்கள் வழியாக நின்று செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராணுவம் பற்றி அவதூறாகப் பேசுவது பேச்சு சுதந்திரமா? ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்..!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்திற்கு பெங்களூரு போலீஸ் அனுமதி மறுப்பு.. அப்புறம் எப்படி நடந்தது?

மீண்டும் ஒரு சவரன் ரூ.73,000ஐ தாண்டியது.. இன்று ஒரே நாளில் 320 ரூபாய் உயர்வு..!

தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய இ-ஆதார் கட்டாயம் என மத்திய ரயில்வே அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரையில்
Show comments