Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐஸ்வர்யாவை அடுத்து போலீசில் புகார் அளித்த செளந்தர்யா.. என்ன ஆச்சு ரஜினி மகள்களுக்கு?

ஐஸ்வர்யாவை அடுத்து போலீசில் புகார் அளித்த செளந்தர்யா.. என்ன ஆச்சு ரஜினி மகள்களுக்கு?
, புதன், 10 மே 2023 (10:24 IST)
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தனது நகைகள் காணாமல் போனதாக ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இன்று அவரது இளைய மகள் சௌந்தர்யா காவல் நிலையத்தில் தனது கார் சாவியை காணவில்லை என புகார் அளித்துள்ளார். 
 
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும் கோச்சடையான் பட இயக்குனருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி தனது கார் சாவியை காணவில்லை என தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 
 
தேனாம்பேட்டையில் உள்ள கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது தனது கார் சாவி காணாமல் போனதாக அவர் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து அவரது புகார் மீது காவல்துறையினர் நடக்க எடுத்து வருகின்றனர். 
 
ஏற்கனவே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது நகைகளை காணவில்லை என்று கூறிய நிலையில் அவரது வீட்டில் பணி செய்த ஒரு பெண்தான் அந்த நகைகளை திருடியதாக கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் ரூ.46,000ஐ நெருங்கிய தங்கம் விலை.. பொதுமக்கள் அதிருப்தி..!