Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உயர் நிதிமன்ற வளாகத்தில் தந்தையை வெட்டிய மகன்

Advertiesment
உயர் நிதிமன்ற வளாகத்தில் தந்தையை வெட்டிய மகன்
, செவ்வாய், 12 ஜூலை 2016 (16:19 IST)
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தந்தை மணிமாறனை அவரது மகன் அரிவாளால் வெட்டியுள்ளார்.


 

மணிமாறன் என்பவர், சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். இன்று, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர் அறையில்,  குடும்ப பிரச்னை காரணமாக வழக்கறிஞர் மணிமாறனின் மகன் ராஜேஷ் அவரை அரிவாளால் வெட்டியுள்ளார். இதை தொடர்ந்து, வழக்கறிஞர் மணிமாறனின் மகனை காவல்துறையினர் கைது செய்தனர். காயமடைந்த மணிமாறனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மதிய வேளை மட்டுமின்றி  மத்திய பாதுகாப்பு படை வசம் உள்ள உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரை அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அனைவரது மத்தியிலும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எங்களை துரத்தி புகைப்படம் எடுத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் : ராம்குமாரின் தங்கை ஆவேசம்