Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தந்தையின் பெண்கள் சகவாசம் – சொத்துக்காகக் கொலை செய்த மகன்

Webdunia
வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (08:53 IST)
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தனது தாயை விட்டு வேறொரு பெண்ணுடன் தனியாக வாழ ஆரம்பித்த தந்தையை சொத்துகளைக் காப்பாற்றுவதற்காக மகன் கொலை செய்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியை அடுத்த கரையான் பட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் குபேந்திரன். இவருக்கு பல வருடங்களுக்கு திருமனமான நிலையில் தனது மனைவியைப் பிரிந்து வேறொரு திருமனம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு முத்துப்பாண்டி என்ற 25 வயது மகன் உள்ளார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இரண்டாவது மனைவியுடனும் தகராறு செய்துவிட்டு தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வந்துள்ளார் குபேந்திரன். அப்போது அந்த வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு பெண்ணோடு அவருக்கு தொடர்பு ஏற்பட்டு அவருடன் வாழ ஆரம்பித்துள்ளார். இது அவரது மகன் முத்துப்பாண்டிக்கு தெரிய வர தந்தையின் மூலம் சொத்தில் அந்த பெண்ணுக்கும் பங்கு சென்றுவிடுமோ என்ற அச்சத்தில் இருந்துள்ளார்.

இதனால் குடும்ப சொத்துகளைக் காப்பாற்ற தனியாக வீட்டில் இருந்த தனது தந்தையைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments