Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போயஸ் கார்டன் வீட்டில் யாரோ இருக்காங்க! – தீபா புகார் விசாரணை

Webdunia
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (20:16 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் வீட்டில் யாரோ இருப்பதாக ஜெ.தீபா அளித்த புகார் மீதான விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோடநாடு எஸ்டேட், திராட்சை தோட்டம், போயஸ் கார்டன் வீடு என சுமார் 900 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து உள்ளது. இறக்கும் முன் இவற்றை ஜெயலலிதா யாருக்கும் உயில் எழுதி வைக்கவில்லை. இதனால் இவற்றை நிர்வகிக்க நிர்வாகி ஒருவரை அமைக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது.

இதை விசாரித்த நீதிபதிகள் ஜெயலலிதாவுக்கு உறவுமுறை வாரிசுகள் இருப்பதால் இதற்கு நிர்வாகிகளை நியமிக்க முடியாது என உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மேல்முறையீடு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையில் போயஸ் கார்டன் வீடு மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அதில் யாரும் தற்போது வசிக்கவில்லை என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் போயஸ் வீட்டில் யாரோ இருப்பதாக ஜெயலலிதாவின் உறவினர் ஜெ.தீபா புகார் அளித்திருப்பதால், இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments