Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஞாயிறு முழு ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள்: தமிழக அரசு அறிவிப்பு!

ஞாயிறு முழு ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள்: தமிழக அரசு அறிவிப்பு!
, வியாழன், 13 ஜனவரி 2022 (18:11 IST)
கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் காரணமாக தமிழகத்தில் திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு அன்று முழு ஊரடங்கும், அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் ஞாயிறு முழு ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் வரும் ஜனவரி 16 ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட உள்ள ஞாயிறு முழு ஊரடங்கின்போது மருந்துகள் மற்றும் பால் டெலிவரி செய்ய மின் வணிக நிறுவனங்களின் சேவை அனுமதிக்கப்படும் என்றும் இதற்கு காவல்துறையினர் ஒத்துழைப்பு நல்குவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒகேனக்கல் செல்ல பொதுமக்களுக்கு தடை: மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!