வெளியே பாண்டி ஜூஸ்.. உள்ளே பாக்கெட் சாராயம் – கும்பகோணத்தில் சிக்கிய பலே கும்பல்

Webdunia
வியாழன், 5 செப்டம்பர் 2019 (15:03 IST)
கும்பகோணத்தில் ஜூஸ் என்ற பெயரில் சாரயத்தை கடத்திய கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கும்பகோணத்தில் உதயம் நகர் பகுதியில் வீடு ஒன்றில் சிலர் ஜூஸ் பாக்கெட்டுக்கள் தயாரித்து விற்பனை மொத்தமாக விற்பனை செய்து வந்துள்ளனர். இதனால் அடிக்கடி ஜூஸ் பாக்கெட்டுகள் ஆர்டர் எடுக்க அடிக்கடி அங்கே கனரக வாகனங்கள் வருவதும் போவதுமாய் இருந்திருக்கின்றன.

ஆனால் அந்த வீட்டில் ஏதோ வித்தியாசமாக நடப்பது போல் அந்த பகுதி மக்களுக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது. இதுகுறித்து போலீஸுக்கு தெரியவர, திடீரென அந்த வீட்டிற்குள் புகுந்து சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். உள்ளே பேரல் பேரலாக சாராயம் இருப்பதை கண்ட போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். “பாண்டி ஜூஸ்” என்ற பாக்கெட்டில் சாராயத்தை அடைத்து விற்பனை செய்து வந்திருக்கிறார்கள் என்பது போலிஸுக்கு தெரிய வந்துள்ளது.

அதை தொடர்ந்து சாரயம் கடத்திய ராஜு என்கிற நபர், அவரது உதவியாளர் மற்றும் அங்கே பணிபுரிந்தவர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும் சாராய பேரல்களையும், அவற்றை கடத்த பயன்படுத்திய கார், மோட்டார் சைக்கிள் ஆகிய வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments