Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆயிரம் பாம்புகளுக்கு மேல் பிடித்த நபர் மர்ம மரணம் - கடலூரில் பரிதாபம்

Webdunia
வியாழன், 16 மார்ச் 2017 (12:58 IST)
கடலூர் மாவட்டத்தில் ஆயிரம் பாம்புகளுக்கும் மேல் பிடித்து, பாம்பு மனிதன் என பெயர் எடுத்த பூனம் சந்த் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.


 

 
வடநாட்டில் இருந்து வந்து, தமிழகத்தின் கடலூரில் வாழ்ந்து வருபவர் பூனம்சந்த். பாம்புகளை உயிருடன் பிடிப்பதில் இவர் கில்லாடி என்பதால், அந்த பகுதிகளில் வீடுகளில் பாம்புகள் புகுந்து விட்டால் இவரைத்தான் அழைப்பார்கள். அந்த பகுதியில் இதுவரை ஆயிரம் பாம்புகளுக்கும் மேல் இவர் உயிருடன் பிடித்து சாதனை படைத்துள்ளார். பாம்புகளை கொல்லக் கூடாது என்பது பூனம்சந்தின் கொள்கையாகும். எனவே, பாம்புகளை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைப்பதை அவர் வாடிக்கையாக கொண்டிருந்தார்.
 
இந்நிலையில், சமீபத்தில் ஒரு அலுவலகத்தில் புகுந்த பாம்பை பிடித்து விட்டு, வீட்டிற்கு திரும்பிய அவர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை உடனே மருத்துவமனைக்கு கொன்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர் கூறிவிட்டார்.
 
பாம்பு கடித்து அவர் இறந்திருக்கலாம் என பொதுமக்கள் மத்தியில் செய்தி பரவியது. ஆனால், அவர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார் என தற்போது தெரியவந்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமனாரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மருமகள்.. சந்தேகம் வராமல் இருக்க உடல் முழுவதும் மஞ்சள் பூச்சு..!

நாளை கூடுகிறது பாராளுமன்றம்.. டிரம்ப், வங்கமொழி மக்கள் வெளியேற்றம்.. பீகார் தேர்தல் பிரச்சனையை எழும்புமா?

இன்று முதல் 3 நாட்களுக்கு செம மழை! எந்தெந்த பகுதிகளில்..? - வானிலை ஆய்வு மையம்!

50 ஆண்டுகளுக்கு பிறகு சீரமைக்கப்பட்ட வள்ளி குகை.. திருச்செந்தூர் பக்தர்கள் மகிழ்ச்சி..!

ஊட்டியில் இன்றும் நாளையும் சுற்றுலா தலங்கள் மூடல்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments