தற்கொலை செய்து கொள்வதாக ஆடியோ வெளியிட்ட காவல் ஆய்வாளர் மீது திடீர் நடவடிக்கை

Webdunia
திங்கள், 8 ஜனவரி 2018 (22:32 IST)
சென்னையில் பணிபுரிந்து கொண்டிருந்த ஆறு காவல்துறை ஆய்வாளர்களை திடீரென மாற்றி காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். இவர்களில் ராஜீவ் என்ற ஆய்வாளரும் ஒருவர். இவர்  தலைமைச்செயலக காலனி காவல் ஆய்வாளராக பணிபுரிந்து கொண்டு வருகிறார். இவர் சமீபத்தில் மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக ஆடியோ ஒன்றை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்கொலை செய்துகொள்ள போவதாக மிரட்டல் விடுத்த காவல்துறை ஆய்வாளர் ராஜீவை செக்ரெட்ரியேட் காலனி காவல் நிலையத்திலிருந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார். இவருடன் மேலும் 5 காவல்துறை ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

சிவசுப்பு என்பவர் வில்லிவாக்கம் பகுதிக்கும், ஸ்ரீனிவாசன் என்ற ஆய்வாளர் திருவல்லிக்கேணி பகுதிக்கும், இளவரசு என்ற ஆய்வாளர் மெரீனா பகுதிக்கும், நித்யகுமாரி என்ற ஆய்வாளர் ராயபுரம் பகுதிக்கும் செல்லமுத்து என்பவர் செகரட்டரி காலனி பகுதிக்கும் மாற்றப்பட்டனர். இதற்கான உத்தரவை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சற்றுமுன்னர் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோடையன் ஊரில் மீட்டிங்!.. நம்ம கோட்டைன்னு காட்டணும்!.. நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட பழனிச்சாமி!...

டிட்வா புயல்: சென்னை மாநகராட்சியின் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?

மனைவியை கொலை செய்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவன்!.. கோவையில் அதிர்ச்சி!....

ஒரு கிலோ மல்லிகைப்பூ 4000 ரூபாய்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

ஆபத்தை உணராமல் மெரினாவில் குறைந்த பொதுமக்கள்.. போலீசார் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments