Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்ட்ரல் - எக்மோருக்கு ரூ.1,800...! வட இந்திய தொழிலாளர்களை ஏமாற்றிய ஆட்டோ ஓட்டுநர்கள் கைது...!

Webdunia
திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (10:25 IST)
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து எழும்பூர் ரயில் நிலையத்திற்கு செல்ல வட இந்திய தொழிலாளர்களிடம் ரூ.1800 வாங்கிய 6 ஆட்டோ ஓட்டுனர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர்
 
பீகாரில் இருந்து சென்னை வந்த 19 கூலி தொழிலாளர்களை சென்ட்ரலில் இருந்து எழும்பூர் ரயில் நிலையத்தில் இறக்கி விடுவதாக ஏற்றி  1800 ரூபாய் அடாவடியாக வாங்கியதாக ஆறு ஆட்டோ டிரைவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  
 
சென்ட்ரலில் இருந்து எழும்பூர் செல்ல நீண்ட தூரம் ஆகும் என்றும் அதனால் ஒரு ஆட்டோவிற்கு மூன்று பேர் மீதும் ஆறு ஆட்டோகளில் ஏற்றி செல்கிறோம் என்றும்  ஒரு ஆட்டோவுக்கு 300 ரூபாய் என 1800 ரூபாய் என்று பேசி உள்ளனர். 
 
ஆனால்  திடீரென சந்தேகம் அடைந்த ஒரு தொழிலாளி 100 என்ற காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட நிலையில் உடனடியாக காவல்துறையினர் ஆட்டோவை சுற்றி வளைத்து விசாரணை செய்தனர். அப்போது மொழி தெரியாத வட இந்திய தொழிலாளர்களை ஏமாற்றியதாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து ஆட்டோ ஓட்டுநர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments