Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவசங்கர் பாபா மீது இன்னொரு போஸ்கோ வழக்கு!

சிவசங்கர் பாபா மீது இன்னொரு போஸ்கோ வழக்கு!
, ஞாயிறு, 11 ஜூலை 2021 (08:36 IST)
சுஷில் ஹரி சர்வதேச பள்ளியை சேர்ந்த மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு கூறியதை அடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டார் என்பதும் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது புழல் சிறையில் இருக்கும் சிவசங்கர் பாபா மீது மீண்டும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டது. இதனையடுத்து சிபிசிஐடி போலீசார் அவரை இரண்டாவது முறையாக அவரை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
ஏற்கனவே சிவசங்கர் பாபாவுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதை அடுத்து இந்த வழக்கு வலுவாக உள்ளதால் தற்போது மீண்டும் போக்சோ பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால் ஒரு வருடத்திற்கு ஜாமீன் கிடைக்காது என்பது ஒரு குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்பவர்கள் மீது தான் போக்சோ சட்டம் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிவசங்கர் பாபா மீது 2 போக்சோ  வழக்குகள் பாய்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

18.74 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!