Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவசங்கர் பாபாவை 3 நாட்கள் காவலில் எடுத்த போலீஸார் முன்கூட்டியே சிறையில் அடைத்தது ஏன்?

சிவசங்கர் பாபாவை 3 நாட்கள் காவலில் எடுத்த போலீஸார் முன்கூட்டியே சிறையில் அடைத்தது ஏன்?
, புதன், 30 ஜூன் 2021 (18:27 IST)
மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டம் பாய்ந்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் 3 நாள் காவலில் எடுக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால் ஒரே நாளில் போலீசார் சிவசங்கர் பாபா அவரை சிறையில் அடைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
சிவசங்கர் பாபாவை அழைத்துக் கொண்டு அவருடைய சுசில்ஹரி சர்வதேச பள்ளிக்கு சென்ற காவல்துறையினர் அங்கு லேப்டாப் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களை கைப்பற்றினர். மேலும் சிவசங்கர் பாபாவின் இமெயிலில் இருந்து முக்கிய வீடியோ ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர். அந்த வீடியோவில் சிவசங்கர் பாபா ஒரு சில பெண்களுடன் உல்லாசமாக இருந்து கொண்டே மாணவி ஒருவருக்கு வீடியோ காலில் பேசியுள்ளார்
 
அந்த வீடியோகாலை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து மாணவி காவல் துறைக்கு அனுப்பி உள்ள நிலையில் தகுந்த ஆதாரம் கிடைத்து விட்டது. இதனால் அது ஒரே நாளில் விசாரணையை முடித்து விட்டு சிவசங்கர் பாபா அவரை மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் ஆகஸ்டில் பள்ளிகள் திறப்பு.... ?