Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெரீனாவில் மீண்டும் சிவாஜி சிலை: அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

Webdunia
திங்கள், 1 அக்டோபர் 2018 (10:23 IST)
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு திமுக ஆட்சியில் சென்னை மெரீனாவில் வெண்கல சிலை வைக்கப்பட்டது. இந்த சிலையை அப்போதைய முதல்வரும் சிவாஜியும் நெருங்கிய நண்பருமான மு.கருணாநிதி திறந்து வைத்தார்.

ஆனால் இந்த சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டதை அடுத்து அடையாறில் உள்ள சிவாஜி மணிமண்டபத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் சிவாஜி குடும்பத்தினர்களும் ரசிகர்களும் அதிருப்தி அடைந்தனர்.

இந்த நிலையில் இன்று சிவாஜி கணேசனின் 90வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. சென்னை அடையாறில் உள்ள சிவாஜி மணிமண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கும் சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர் கடம்பூர் ராஜூ பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'மெரினாவில் மீண்டும் சிவாஜி சிலை வைக்க பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வந்தால் அரசு பரிசீலிக்கும்' என்று கூறினார். எனவே மெரீனாவில் போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல் ஒரு இடத்தை தேர்வு செய்து சிவாஜி ரசிகர்கள் அரசை அணுகினால் மீண்டும் மெரீனாவில் சிவாஜி சிலை வைக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments