Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவகங்கை ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல்: குலுக்கல் முறையில் அதிமுக வெற்றி

சிவகங்கை ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல்: குலுக்கல் முறையில் அதிமுக வெற்றி
, வெள்ளி, 11 டிசம்பர் 2020 (17:02 IST)
சிவகங்கை ஊராட்சி துணை தலைவர் தேர்தலில் அதிமுகவின் வேட்பாளர் சரஸ்வதி குலுக்கல் முறையில் வெற்றி பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இன்று நடைபெற்ற சிவகங்கை ஊராட்சி துணை தலைவர் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் இடையே கடுமையான போட்டி இருந்தது. இந்த நிலையில் பதிவான வாக்குகளை எண்ணியபோது அதிமுக திமுக வேட்பாளர்கள் சமமாக வாக்குகளை பெற்று இருந்ததால் குலுக்கல் முறையில் வெற்றியை தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது
 
குலுக்கல் முறையிலான வெற்றிக்கு இருதரப்பிலும் ஒப்புக் கொண்டதை அடுத்து குலுக்கல் செய்யப்பட்டதில் அதிமுக வேட்பாளர் சரஸ்வதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து சிவகங்கை மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது 
 
அதிமுக வேட்பாளராக 8வது வார்டு உறுப்பினராக சரஸ்வதி வெற்றி பெற்றதை அடுத்து அவருக்கும் அவரது ஆதரவாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். குலுக்கல் முறையில் தோல்வி அடைந்த திமுக வேட்பாளர் சோகத்துடன் அங்கிருந்து வெளியேறினார். இந்த சம்பவம் சிவகங்கை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வர் பற்றி அவதூறு பேசிய அரசியல்வாதிகள்! – வழக்கை ரத்து செய்த நீதிமன்றம்