Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு

Webdunia
திங்கள், 21 அக்டோபர் 2019 (07:10 IST)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 17ஆம் தேதி தொடங்கி கடந்த ஒரு வாரமாக நல்ல மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அறிவித்துள்ளார்.
 
அதேபோல் கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த இரு மாவட்டங்களை தொடர்ந்து சென்னை உள்பட இன்னும் ஒருசில மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்றிரவு முதல் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துடன் வாகனங்களை ஈயக்கி வருகின்றனர். சென்னையை பொருத்தவரை நேற்றிரவும் இன்று அதிகாலை முதலும் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. குறிப்பாக சைதாப்பேட்டை, அசோக்நகர், தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், அண்ணா சாலை, எழும்பூர், கோடம்பாக்கம், தி.நகர் உள்ளிட்ட இடங்களில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகின்றது
 
இதனிடையே இன்னும் இரண்டு நாட்களுக்கு சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments