Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெடிப்பொருட்களுடன் சுற்றும் திடீர் மனிதன்! – சீர்காழி மக்கள் அச்சம்!

Webdunia
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (10:58 IST)
சீர்காழியில் பாஸ்பரஸ் போன்ற வெடி மருந்துகளுடன் ஆசாமி ஒருவர் இரவு நேரங்களில் உலா வருவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழியின் விளந்திடசமுத்திரம் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் கூரை வீடு ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்பட்டது.

இந்நிலையில் போலீஸார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் மர்ம நபர் ஒருவர் அந்த வீட்டிப் மீது பாஸ்பரஸ் உருண்டையை வீசி சென்றது தெரிய வந்துள்ளது.
மேலும் அந்த மர்ம நபர் சீர்காழியின் பல தெருக்களில் வெடி மருந்துகளுடன் இரவில் உலா வருவதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் இரவில் வெளியே செல்ல அச்சம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைக்குக்மா? நீதிமன்றத்தில் அனல் பறக்கும் வாதம்..!

மேடையில் உற்சாக நடனம்.! பிரதமர் மோடியின் AI வீடியோ வைரல்..!

இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஏழைகளை லட்சாதிபதி ஆக்குவோம்: ராகுல் காந்தி

உலகின் முதல் 6ஜி சாதனம் ஜப்பானில் அறிமுகம்.. 5ஜியை விட 20 மடங்கு வேகம்..!

மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல்.! மேலும் 7 நாட்கள் நீட்டிப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments