Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனுஷ் விவகாரம் ; சுசித்ரா விளக்கம்; வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

தனுஷ் விவகாரம் ; சுசித்ரா விளக்கம்; வறுத்தெடுத்த நெட்டிசன்கள்
, வெள்ளி, 3 மார்ச் 2017 (10:51 IST)
நடிகர் தனுஷ் தன்னை தாக்கவில்லை என்றும், அது ஒரு விளையாட்டில் ஏற்பட்ட காயம் எனவும் விளக்கம் அளித்த பாடகி சுசித்ராவை நெட்டிசன்கள் வறுத்தெடுத்ததில் அவர் படு அப்செட் ஆகியிருப்பதாக தெரிகிறது.


 

 
பிப்ரவரி 20-ம் தேதி ட்விட்டர் பக்கத்தில் தனது காயம்பட்ட கையின் புகைப்படத்தைப் பகிர்ந்த சுசித்ரா, இது தனுஷ் குழுவின் மோசமான கையாளால் ஆன காயம். மன்னித்துவிடுங்கள். நீங்கள் தகுதி இழந்துவிட்டீர்கள் என குறிப்பிட்டிருந்தார்.
 
மேலும், இது சுச்சிதான், நான் மீண்டும் வந்துவிட்டேன். பாதுகாப்பாக உள்ளேன். தனுஷ் என்னிடம் ஆடிய தரக்குறைவான விளையாட்டைப் பற்றி அனைவரிடமும் கூற தயாராக இருக்கிறேன் என்று பதிவிட்டார்.
 
இதற்கு சுசித்ராவின் கணவர் கார்த்திக் குமார் விளக்கமளித்திருந்தார். சுசித்ராவின் ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதாகவும், இதில் சம்பந்தப்பட்ட நபர்களும் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதால் அவர்களிடம்  மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறேன் எனவும் கூறியிருந்தார்.

webdunia

 

 
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில், புரளிகளுக்கு விளக்கம் அளிக்கிறேன். தனுஷ் என்னை தாக்கவில்லை. அது ஒரு விளையாட்டு. சற்று கட்டுப்பாடு மீறிச் சென்றது. எனது கை ஒரு குழுவால் தாக்கப்பட்டது என்று சுசித்ரா சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

webdunia

 

 
இதைக் கண்ட நெட்டிசன்கள், அப்படியெனில் இதற்கு முன்பு போட்ட டிவிட்லாம் நீங்க போதைய இருக்கும் போது போட்டதா, இல்ல இப்போ போதையா இருக்கீங்களா? ஏன் மாற்றி மாற்றி பேசி இப்படி பொய் சொல்கிறீர்கள் என எகிற, அப்செட் ஆன சுசித்ரா தனது டிவிட்களை தன்னை பின் தொடர்பவர்கள் மட்டும் பார்க்கும் படி செய்து விட்டாராம்..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏடிஎம்-களில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.150 கட்டணம் கிடையாது: வதந்திக்கு வங்கி முற்றுப்புள்ளி