Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரன் கட்சியில் இணைந்த ரஜினியின் குரல்!

Webdunia
சனி, 9 மார்ச் 2019 (16:42 IST)
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ளதால் தமிழக அரசியல் பரபரப்பாகவே உள்ளது. திமுக காங்கிரஸ் உடன் தொகுதி குறித்து பேசி வரும் நிலையில், அதிமுக தேமுதிக கூட்டணி இழுபறியில் உள்ளது. 
ஆனால், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எந்த ஒரு ஆரவாரமும் இன்றி அமைதியாக காணப்படுகிறது. ஆனால், தினகரன் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதி என்பதை மட்டும் ஏற்கனவே தெரிவித்து விட்டார்.
 
மேலும், தின்கரன் 3வது அணி அமைக்க திரைமறைவு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் அவ்வப்போது பரவி வருகின்றன. இது மட்டுமின்றி வேல்முருகன் கட்சி உள்பட சில கட்சிகள் தினகரனின் கட்சியுடன் கூட்டணி சேர முன்வந்துள்ளது. 
 
இந்நிலையில், பிரபல பாடகர் மனோ, டிடிவி தினகரன் முன்னிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியில் இணைந்துள்ளார். இதற்கு முன்னர் பாமகவில் இருந்து விலகிய நடிகர் ரஞ்சித் அமமுக கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments