Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் சட்டக்கல்லூரிகளை மூடி விடலாமே? உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டம்.!!

Senthil Velan
வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (14:12 IST)
தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டக் கல்லூரிகளையும் மூடி விடலாமே என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டமாக கேள்வி எழுப்பிள்ளது.
 
தமிழகத்தில் உள்ள அரசு சட்டக்கல்லூரிகளில் காலி பணியிடங்களை நிரப்பக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று  விசாரணைக்கு வந்தபோது,  சட்டக் கல்லூரிகளில் மாணவர்கள், பேராசிரியர்கள் விகிதம், ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் குறித்து நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். 
 
தமிழகத்தில் 7 அரசு சட்டக் கல்லூரிகளில் முதல்வர் இல்லை என்றும் பல கல்லூரிகளில் அடிப்படை வசதிகளே இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டக் கல்லூரிகளையும் மூடி விடலாமே? என காட்டமாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள், புதிய சட்டக் கல்லூரிகளை திறந்தால் போதுமா? தேவையான பேராசிரியர்களை நியமிக்க வேண்டாமா? என்று ஆவேசம் தெரிவித்தனர்.


ALSO READ: திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பை சேர்த்து மகா பாவம் செய்துவிட்டார்கள்.! முன்னாள் தலைமை அர்ச்சகர் ஆதங்கம்..!!
 
அரசு சட்டக் கல்லூரிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், இது குறித்து உயர்கல்வித் துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய ஆணையிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்ச்சையில் மாணவிகள் வளைகாப்பு ரீல்ஸ் - ஆசிரியர் சஸ்பெண்ட்..! தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ்.!!

2024ஆம் ஆண்டுக்குள் ககன்யான் விண்கலத்தை ஏவ முயற்சி! இஸ்ரோ தலைவர்

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு உதவித் தொகை: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

ஹேக் செய்யப்பட்டது உச்சநீதிமன்ற YouTube பக்கம்..! வழக்கு விசாரணை நேரலையில் பாதிப்பு..!!

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு சர்ச்சை.! சிறப்பு விசாரணைக் குழு அமைக்க கோரி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அவசர மனு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments