Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உட்காரும் உரிமை சட்டத்தை பின்பற்றாத கடைகள்! 31 கடைகளுக்கு அபராத நோட்டீஸ்!

Prasanth Karthick
வியாழன், 5 டிசம்பர் 2024 (15:39 IST)

ஊழியர்கள் பணிக்கு இடையே அமர்ந்து கொள்ள இருக்கை அளிக்கும் சட்டத்தை பின்பற்றாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

தமிழ்நாட்டில் துணிக்கடைகள் உள்ளிட்ட ஊழியர்கள் நின்று வேலை பார்க்கும் கடைகளில் அவர்கள் அமர இருக்கை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்தது. இதன் அடிப்படையில் சமீபத்தில் தமிழக அரசு “உட்காரும் உரிமை” Right to Sit சட்டத்தை அறிமுகப்படுத்தியது.

 

அதன்படி கடைகள், வணிக நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் இல்லாதபோது அமர்ந்து கொள்ள இருக்கை வழங்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் பல கடைகளில் இந்த நடைமுறை சரியாக பின்பற்றப்படுவது இல்லை என்ற புகார்களும் உள்ளது.

 

இந்நிலையில் ஈரோட்டில் உள்ள துணிக்கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது பல கடைகளில் ஊழியர்களுக்கு இருக்கை தராமல் இருந்துள்ளனர். இதையடுத்து நடவடிக்கையில் இறங்கிய அதிகாரிகள் 31 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அபராத நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments