Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்தெந்த கடைகள் எத்தனை மணி வரை செயல்படும்? – அரசு அறிவிப்பு

Webdunia
வியாழன், 26 மார்ச் 2020 (16:13 IST)
தமிழகம் முழுவதும் ஊரடங்கு செயல்படுத்தியுள்ள நிலையில் எந்தெந்த கடைகள் எவ்வளவு நேரம் செயல்படலாம் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்தாலும் அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் திறந்தே இருக்கும் என கூறப்பட்டிருந்தது.

ஆனால் மக்கள் பொருட்கள் வாங்க செல்வதாக தொடர்ந்து சாலைகளில் சுற்றுவதால் கடைகள் செயல்பட நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி காய்கறி கடைகள், மார்க்கெட்டுகள் காலை 6 மணி தொடங்கி 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. காலை உணவகங்கள் 7 மணி முதல் 9 மணி வரை செயல்படலாம். மளிகை பொருட்களை விற்கும் கடைகள் மதியம் 12 மணி வரையிலும் செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பால் விநியோகஸ்தர்கள் காலை 9 மணி வரை மட்டுமே பால் விநியோகிப்பதாக கூறியுள்ள நிலையில் 24 மணி நேரமும் ஆவின் பாலகங்களில் பால் பாக்கெட்டுகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மளிகை பொருட்களை வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

IRCTC-யின் 'ஸ்ரீ ராமாயண யாத்திரை' டீலக்ஸ் ரயில் பயணம்.. தொடங்குவது எப்போது? கட்டணம் எவ்வளவு?

தேர்தலுக்கு பின்புதான் முதலமைச்சர் யார்? என்பதை முடிவு செய்வோம்: டிடிவி தினகரன்

அடுத்த கட்டுரையில்
Show comments