Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவனை அரிவாளால் வெட்டி கொலை செய்த மனைவி.. நீதிபதி அளித்த தண்டனை விவரம்..!

Siva
செவ்வாய், 24 ஜூன் 2025 (11:30 IST)
தேனி மாவட்டம், கடமலைக்குண்டு பகுதியில் கணவரை கோடாரியால் வெட்டி கொலை செய்த மனைவிக்கு, நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்த ராஜா, தனது மனைவி ஜெயா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். ராஜாவுக்கும் ஜெயாவுக்கும் இடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்தன. இந்நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு திடீரென ஜெயா, தனது வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து ராஜாவை வெட்டி கொலை செய்தார். பின்னர், கணவரின் உடல்நலக்குறைவால் தான் அவர் இறந்துவிட்டதாக ஊர் மக்களிடம் நாடகமாடினார்.
 
ஆனால், ராஜாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டபோது, ஜெயா தான் தனது கணவரை கொலை செய்தது தெரிய வந்தது.  இதுகுறித்த வழக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ஜெயாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு கடமலைக்குண்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘விடியல் எங்கே?’: திமுகவின் வாக்குறுதிகளை அம்பலப்படுத்திய பாமக தலைவர் அன்புமணி

விநாயகர் சதுர்த்தியையொட்டி மெட்ரோ ரயில் இயக்கும் நேரம் மாற்றம்.. முழு விவரங்கள்..!

அரசியலில் விஜய் ஒரு 'காலி பெருங்காய டப்பா: அமைச்சர் சேகர்பாபு

நாடு முழுவதும் ஜியோ சேவை பாதிப்பு: ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதி

கத்தியை நெருப்பில் காட்டி மனைவிக்கு சூடு வைத்த கணவன்.. இன்னொரு வரதட்சணை கொடுமை சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments