Publish Date: Fri, 08 Apr 2022 (16:07 IST)
Updated Date: Fri, 08 Apr 2022 (16:10 IST)
பாலியல் தொல்லையால் கைது செய்யப்பட்ட சிவ சங்கர் பாபாவிற்கு ஜாமீன் கிடைத்தது!
சென்னை அருகே கேளம்பாக்கம் என்ற பகுதியில் உள்ள சுஷில் ஹரி என்ற சர்வதேச பள்ளியில் மாணவிகள் சிலர் பாலியல் புகார் கொடுத்ததை அடுத்து அந்த பள்ளியின் உரிமையாளர் சிவசங்கர் பாபா கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16ம் தேதி டெல்லியில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர். 2 வழக்குகளில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவிற்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்.