Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை 3 கட்சிகள் அழைத்தன: காங்கிரஸில் இணைந்த ஷகிலா பேட்டி!

Webdunia
சனி, 27 மார்ச் 2021 (06:50 IST)
என்னை 3 கட்சிகள் அழைத்தன: காங்கிரஸில் இணைந்த ஷகிலா பேட்டி!
என்னை மூன்று கட்சிகள் அழைத்தனர் என்றும் அதில் எனக்கு பிடித்தது காங்கிரஸ் கட்சி என்பதால் அந்த கட்சியில் இணைந்தேன் என்றும் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை ஷகிலா தெரிவித்துள்ளார். 
 
தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்த நடிகை ஷகிலா நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் என்பதும் அவருக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.
 
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஷகிலா ’இன்று முதல் தேர்தல் பிரசாரம் செய்யப்போவதாக கூறினார். மேலும் தன்னை மூன்று கட்சிகள் அழைத்ததாகவும் அதில் சிறந்த கட்சி காங்கிரஸ் என்பதால் அதில் இணைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
 
தமிழ்நாட்டின் பிரச்சினை குறித்து தேர்தல் பிரச்சாரத்தில் பேசுவேன் என்றும் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் குறித்து மக்களிடம் எடுத்துக் கூறுவேன் என்றும் ஷகிலா இந்த பேட்டியில் கூறினார். ஷகிலா பேட்டி அளித்த போது அவருடன் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments