Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

Siva
ஞாயிறு, 13 ஏப்ரல் 2025 (14:29 IST)
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தேடப்பட்டு வந்த மத போதகர் ஜான் ஜெபராஜ் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
கடந்த ஆண்டு கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், இரண்டு சிறுமிகளுக்கு மத போதகர் ஜான் ஜெபராஜ் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
வழக்கு பதிவு செய்தவுடன் ஜான் ஜெபராஜ் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
 
இந்த நிலையில், கேரள மாநிலத்தில் உள்ள மூணாறு பகுதியில் அவர் இருப்பது குறித்த தகவல் கோவை போலீசாருக்கு கிடைத்தது. இதன்படி, நேற்று கேரளாவிற்குச் சென்ற போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
 
அவரை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணைக்கு பின்னர், கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை ஏப்ரல் 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த பாலத்தை எவன் கட்டியது? மத்திய பிரதேச பாலத்தை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்..!

எரியும் கப்பலை கயிறு கட்டி இழுக்க முயற்சிக்கும் இந்திய கடலோர படை.. என்ன காரணம்?

இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்??

மோடியிடம் கோரிக்கை வைத்தேன்.. அவர் முடியாது என்று கூறிவிட்டார்: வங்கதேச பிரதமர்

திமுக, அதிமுகவில் இருப்பவர்கள் பலர் விஜய் கட்சிக்கு வருவார்கள்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்