Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிநீரில் கழிவுநீர்..? இருவர் பலி! காரணம் குடிநீர் அல்ல! - அமைச்சர் மறுப்பு!

Prasanth Karthick
வியாழன், 5 டிசம்பர் 2024 (11:35 IST)

தாம்பரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து இருவர் பலியானதாக வெளியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

தாம்பரம் 13வது வார்டில் மக்கள் வழக்கமாக குடிக்கும் குடிநீரில் கழிவுநீர் கலந்ததாக கூறப்படுகிறது. இது தெரியாமல் மக்கள் அதை குடித்ததில் பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் இருவர் தற்போது வரை சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர்.

 

இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்ன அமைச்சர் த.மோ.அன்பரசன், 13வது வார்டையும் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் பாதிக்கப்பட குடிநீர் காரணம் அல்ல என கூறியுள்ளார்.
 

ALSO READ: புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா சிவராஜ் குமார்?... சிகிச்சைக்காக அமெரிக்கா பயணம்!
 

அவர் கூறியதாவது “சென்னை, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலக்கவில்லை. குடிநீரில் கழிவுநீர் கலந்திருந்தால் நூற்றுக்கணக்கில் பாதிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் 23 பேருக்குதான் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. உடல்நலம் பாதிக்கப்படுவதற்கு முன் அவர்கள் மீன் சாப்பிட்டுள்ளார்கள். உணவுப்பொருள் கலப்படம் நிகழ்ந்ததாலேயே ஒருவர் பலியாகியுள்ளார்.

 

இந்த பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். உடல்நல கோளாறுக்கான சரியான காரணம் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments