Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் உரிமை தொகை பெற பிரத்யேக ஏ.டி.எம். கார்டுகள்.. தமிழக அரசின் சூப்பர் திட்டம்..!

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2023 (17:40 IST)
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் நாளை முதல் வழங்கப்பட இருக்கும் நிலையில் இன்றே ஒரு சிலருக்கு இந்த பணம் வந்து விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 
 
இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமை தொகையை பெறுவதற்காக பிரத்யேக ஏடிஎம் கார்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
கலைஞர் மகளிர் உரிமை தொகைய திட்டத்தை காஞ்சிபுரத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிலையில்  கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு 6000 பிரத்தியேக ஏடிஎம் கார்டுகள் வந்துள்ளதாகவும் இவை வேலூர் மாவட்டத்தில் உள்ள பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
வங்கிகள் மூலம்  முதல் கட்டமாக 6000 ஏடிஎம் கார்டுகள் வந்துள்ளதாகவும் இந்த ஏடிஎம் கார்டுகளை காட்பாடி, குடியாத்தம், கே.வி.குப்பம், அணைக்கட்டு மற்றும் வேலூரில் உள்ள தாலுகாக்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு முதலீடு கொண்டு வந்தார்? எல்.முருகன் கேள்வி

வெடித்து சிதறிய ரஷ்ய செயற்கைக்கோள்! விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்! – விஞ்ஞானிகள் கவலை!

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கண்டனம்..!

ஆளுங்கட்சியினர் துணையோடு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது: பிரேமலதா குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments