Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி.. அமலாக்கத்துறைக்கு முக்கிய உத்தரவு..!

Mahendran
திங்கள், 8 ஜூலை 2024 (17:59 IST)
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், வங்கி ஆவணங்களை வழங்க கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் கரூர் சிட்டி யூனியன் வங்கி கிளையின் கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை செந்தில் பாலாஜி தரப்பிற்கு வழங்க அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி   அமலாக்கத்துறை அதிகாரிகளால்  கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டுக்கும் மேல் நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது.  மேலும் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு சென்னை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் தள்ளுபடி செய்யப்பட்டதால் இன்னும் அவர் சிறையில் உள்ளார்.

இந்நிலையில் வங்கி சார்பில் அசல் ஆவணங்கள் முழுமையாக வழங்க கோரி, செந்தில் பாலாஜி தரப்பில் சமீபத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த மனு   இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையில்  செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும், அதே நேரத்தில் கரூர் சிட்டி யூனியன் வங்கியின் கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை செந்தில் பாலாஜி தரப்புக்கு அமலாக்கத்துறை வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments