Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது? தொடரும் குழப்பம்..!

Webdunia
வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (12:46 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்ற குழப்பம் நீடித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமைச்சர்  செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
இந்த நிலையில் செந்தில் பாலாஜிவின் ஜாமின் மனுவை சென்னை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க மறுத்து சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியது. 
 
ஆனால் சிறப்பு நீதிமன்றம் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிக்க மறுத்து சென்னை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு தெரிவித்தது. இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்ற விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த நிலையில் எந்த வழக்கை யார் விசாரிப்பது என்பது குறித்து தலைமை நீதிபதி தான் முடிவு செய்வார் என்றும் எனவே உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட அமைச்சர் செந்தில் பாலாஜியின் தரப்புக்கு நீதிபதியும் எம்.சுந்தர் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments