Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமலாக்கத்துறையினரிடம் தயிர் சாதம் கேட்ட செந்தில் பாலாஜி.. தினமும் 9 மணி நேரம் விசாரணை..!

Webdunia
புதன், 9 ஆகஸ்ட் 2023 (07:41 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை செய்து வரும் நிலையில் நேற்று அவர் மதிய சாப்பாட்டிற்கு தயிர் சாதம் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.  
 
நீதிமன்ற தீர்ப்பை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.  அவருடைய உடல் நிலையை கருத்தில் கொண்டு இரவில் விசாரணை செய்ய வேண்டாம் என்று அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. 
 
இருப்பினும் அவர் பகலில் கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரம் விசாரணை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் செந்தில் பாலாஜி சாப்பிடுவதற்கு மினி மில்ஸ் கொடுத்த நிலையில் அவர் தயிர்சாதம் தான் வேண்டும் என்று கேட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.  
 
செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சை செய்தவர் என்பதால் விசாரணை நடக்கும் இடத்திற்கு வெளியே இரண்டு இ.இஎஸ்.ஐ மருத்துவர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை அவர்கள் செந்தில் பாலாஜியின் ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments