Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் மருத்துவமனை செல்கிறாரா அமைச்சர் செந்தில் பாலாஜி? பரபரப்பு தகவல்..!

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2023 (07:57 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஒரு மாதமாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு  புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியானது. 
 
இந்த நிலையில் அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், சிறை மருத்துவமனையில் சிகிச்சை செய்யப்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
 கடந்த மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி வந்ததால் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்கு அங்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.
 
 இந்த நிலையில் ஜூலை 26 ஆம் தேதி வரை செந்தில் பாலாஜிக்கு காவல் நீடிக்கப்பட்டு இருக்கும் நிலையில் நேற்று அவர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் அவர் மீண்டும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments