Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செஞ்சி திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று: தொண்டர்கள் அதிர்ச்சி

Webdunia
ஞாயிறு, 28 ஜூன் 2020 (14:10 IST)
கொரோனா வைரஸால் ஏற்கனவே மூன்று திமுக எம்எல்ஏக்கள் பாதிக்கப்பட்டு அதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் தற்போது நான்காவதாக ஒரு திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
கொரோனா வைரசால் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் ஜெ அன்பழகன் பாதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன் பின்னர் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்டி அரசு கொரோனா பாதிக்கப்பட்டார் என்று நேற்று செய்தி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதி திமுக எம்எல்ஏ மஸ்தான் அவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி அவர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments