செஞ்சி திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று: தொண்டர்கள் அதிர்ச்சி

Webdunia
ஞாயிறு, 28 ஜூன் 2020 (14:10 IST)
கொரோனா வைரஸால் ஏற்கனவே மூன்று திமுக எம்எல்ஏக்கள் பாதிக்கப்பட்டு அதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் தற்போது நான்காவதாக ஒரு திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
கொரோனா வைரசால் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் ஜெ அன்பழகன் பாதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன் பின்னர் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்டி அரசு கொரோனா பாதிக்கப்பட்டார் என்று நேற்று செய்தி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதி திமுக எம்எல்ஏ மஸ்தான் அவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி அவர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments