Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளையராஜாவை காரில் கடத்திய சிவகார்த்திகேயன் ரசிகர்! – திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்

Webdunia
சனி, 28 செப்டம்பர் 2019 (19:53 IST)
திருச்சியில் இந்து மகா சபை தலைவரை சிவகார்த்திகேயன் ரசிகர் மண்ர தலைவர் கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி அருகே உள்ள பெரம்பலூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். அந்த ஊரின் சிவகார்த்திகேயன் ரசிகர் மன்ற தலைவராக இருக்கும் இவர் வேலை தேடி வந்துள்ளார். அப்போது திருச்சியில் உள்ள இந்து மகா சபை தலைவர் இளையராஜா இவருக்கு அறிமுகமாகியுள்ளார். அவர் செந்தில்குமாருக்கு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

வேலைவாங்கி தருவதற்கு செலவு ஆகும் என்று சொல்லி பணமும் அடிக்கடி வாங்கியுள்ளார். ஆனால் வேலை மட்டும் வாங்கி தரும் அறிகுறியே தெரியவில்லை. பொறுமையிழந்த செந்தில்குமார் தனது பணத்தை திரும்ப தரும்படி இளையராஜாவிடம் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியது.
இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார் தன் நண்பர்களோடு திட்டமிட்டு, திருச்சி மார்க்கெட்டுக்கு வந்த இளையராஜாவை அல்லேக்காக வண்டியில் வாரி போட்டுக்கொண்டு தப்பித்தார்கள். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் செந்தில்குமார் குரூப்பை துரத்தி சென்றார்கள். கும்பகோணம் ரோட்டில் பாதிதூரம் வரை தப்பிசென்ற செந்தில்குமார் குரூப்பை பிடித்து இளையராஜாவை மீட்டார்கள் போலீஸ்.

இளையராஜாவை கடத்தியது தொடர்பாக செந்தில் குமார் மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேசமயம் செந்திலிடம் பணம் வாங்கி ஏமாற்றியது குறித்து இளையராஜாவிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரியாக 9:30 மணிக்கு அலுவலகம் வர வேண்டும்: பள்ளி குழந்தைகளை போல் நடத்தும் கார்ப்பரேட்..!

சாதி மாறி திருமணம்.. மகள் கண்முன்னே மருமகனை சுட்டு கொன்ற தந்தை: அதிர்ச்சி சம்பவம்!

டெலிவரி ஊழியர்கள் E-Scooter வாங்க ரூ.20 ஆயிரம் மானியம்! - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!

மோடியுடன் பேச போகிறேன்.. இனிமேல் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை இல்லை: பிரேசில் அதிபர்

அடுத்த கட்டுரையில்
Show comments