Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாட்டுவண்டியில் வந்த வேட்பாளர்! – விக்கிரவாண்டியை கவர் செய்யும் நாம் தமிழர்!

Advertiesment
Tamilnadu News
, வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (15:55 IST)
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர் வினோதமான முறையில் மாட்டு வண்டியில் வந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டசபை தொகுதிகளான விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. அதிமுக, திமுக தவிர மாநில அளவிலான பெரிய கட்சிகள் எதுவும் போட்டியிடாத சூழலில் நாம் தமிழர் கட்சி மட்டும் இடைத்தேர்தலை சந்திக்கின்றன.
விக்கிரவாண்டியில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட மு.கந்தசாமி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இன்று மனுதாக்கல் செய்ய சென்ற அவர் மாட்டு வண்டியில் கரும்புகளை கட்டிக் கொண்டு அதில் சென்று மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழ் மரபையும், விவசாயத்தையும் அடையாளப்படுத்தும் விதமாக அவர் அவ்வாறு வந்துள்ளதாக அவரது கட்சியினர் பேசி கொள்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகை விரல் நுனியில் கொண்டுவந்த’ கூகுள்’ : 21 ஆம் ஆண்டு பிறந்தநாள்..