Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செமஸ்டர் தேர்வு மதிப்பெண் வழங்கும் முறை அறிவிப்பு - தமிழக உயர் கல்வித்துறை

Webdunia
திங்கள், 27 ஜூலை 2020 (22:11 IST)
கொரோனா பாதிப்பின் காரணமாக தமிழக கல்லூரிகளில் தேர்வுகளை ரத்து செய்ய ஆலோசனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கல்லூரி பருவத்தேர்வுகளை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில்  செமஸ்டர் தேர்வு மதிப்பெண் வழங்கும் முறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்கலைகழக தேர்வுகளை நடத்துவது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்க யூஜிசி அனுமதி அளித்தது. அதை தொடர்ந்து தேர்வு நடத்துவது குறித்து 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. இந்நிலையில் இறுதியாண்டு மாணவர்களை தவிர மற்ற மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி கலை மற்றும் அறிவியல் இளநிலை பட்டப்படிப்பில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும், முதுநிலை படிப்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வின்றி அடுத்த செமஸ்டருக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல பொறியியல் படிப்பில் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி அறிவிக்கப்பட்டு அடுத்த வகுப்பிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில தொழில்நுட்ப பட்டயப்படிப்பு மாணவர்களுக்கும் முதலாம் ஆண்டு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எம்சிஏ படிக்கும் மாணவர்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டிற்கான பருவதேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது.

இவர்களுக்கு இண்டெர்னல் மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண் சதவீதம் வழங்கப்படும் என யூஜிசி தெரிவித்துள்ளது. இதுதவிர அனைத்து இறுதியாண்டு மாணவர்களுக்கும் தேர்வு உண்டு, தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது செமஸ்டர் தேர்வு மதிப்பெண் வழங்கும் முறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில்,முந்தைய பருவத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டும்.
முதன்மை பாடங்களுக்கும் மொழி பாடங்களுக்கும் மதிப்பெண் கண்க்கீட்டு முறை பொருந்தும்.

விருப்பம் பாடங்கள் மற்றும் துணைப் பாடங்களுக்கு 100 % அகமதிப்பீடு முறையில் மதிப்பெண் வழங்கப்படுக்ம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொலைதூரக் கல்வி மாணவர்களுக்கும் மதிப்பெண் வழங்கும் முறை பொருந்தும் எனவும், குறைவான மதிப்பெண் பெற்றுள்ள மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் அளித்து தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments