Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜனவரி 20 ஆம் தேதிக்குப் பிறகு செமஸ்டர் தேர்வு- அமைச்சர் பொன்முடி

ஜனவரி 20 ஆம் தேதிக்குப் பிறகு செமஸ்டர் தேர்வு- அமைச்சர் பொன்முடி
, வெள்ளி, 19 நவம்பர் 2021 (20:24 IST)
தமிழகத்தில் செமஸ்டர் தேர்வு ஆஃப்லைன் முறையிலேயே நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில்  மதுரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் ஆன்லைன் முறையிலேயே தேர்வு வேண்டும் என போராட்டம் நடத்தினர். இதனால் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போரட்டப்ப வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் எனவும் ஜனவரி 20 ஆம் தேதிக்குப் பிறகு கல்லூரி  மாணவர்களுக்குத் தேர்வு நடைபெறும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மேலும், ஏற்கனவே தெரிஃபித்தபடி ஆஃப்லைன் முறையில் மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக அரசுக்கு நன்றி கூறிய சீமான்