Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பள்ளி குழந்தைகளுக்கு உப்புமா, சிறை கைதிகளுக்கு சிக்கன்: இதுதான் திராவிட மாடலா? செல்லூர் ராஜூ

Advertiesment
பள்ளி குழந்தைகளுக்கு உப்புமா,  சிறை கைதிகளுக்கு சிக்கன்: இதுதான் திராவிட மாடலா? செல்லூர் ராஜூ
, திங்கள், 12 ஜூன் 2023 (10:20 IST)
பள்ளி மாணவ மாணவிகளுக்கு உப்புமா மற்றும் கிச்சடி போடுவதும் சிறை கைதிகளுக்கு சிக்கன் மற்றும் முட்டை போடுவது தான் திராவிட மாடலா என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி உள்ளார். 
 
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் நேற்று பேட்டி அளித்த போது திமுக எப்போது வீட்டுக்கு போகும் என்று மக்கள் எண்ண தொடங்கிவிட்டனர் என்றும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆனால் தான் தமிழ்நாட்டுக்கு உண்மையான விடியல் கிடைக்கும் என்றும் தெரிவித்தனார். 
 
அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவதாக முதலமைச்சர் கூறிய நிலையில் திமுக அரசு சத்து இல்லாத உப்புமா கிச்சடி போன்ற உணவுகளை தருகிறது. 
 
ஆனால் சிறைகைதிகளுக்கு  சிக்கன் முட்டை என விதவிதமான உணவு வழங்குகிறார்கள், இதுதான் திராவிட மாடலா? இந்த ஆட்சியில் தவறு செய்பவர்கள் தான்  நன்றாக இருக்கிறார்கள் கள்ளச்சாராயம் காயச்சியவர்களுக்கு நிவாரணம் தந்த அரசுதானே இது என்று சரமாரியாக விமர்சனம் செய்தார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னை நிலவரம்..!