Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கம், சிறுத்தை இடையே அண்ணாமலை மாட்டிக் கொண்டார்: செல்லூர் ராஜூ

Siva
செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (14:45 IST)
அதிமுக மற்றும் திமுக ஆகிய சிங்கம் சிறுத்தைகள் இடையே அண்ணாமலை மாட்டிக் கொண்டார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.

அதிமுக திமுக ஆகிய இரண்டு கட்சிகளின் டார்கெட் தற்போது பாஜக வாக தான் உள்ளது என்றும் பாஜகவின் அண்ணாமலை, மோடி ஆகியோர்களை தான் இரு கட்சிகளின் தலைவர்கள் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் பாஜகவின் விளம்பர படத்தின் டிரைலர் போன்றது என்றும் பிளாப் ஆகி விடும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தேவி தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று அவர் பிரச்சாரம் செய்தபோது சிங்கம் சிறுத்தை இடையே அண்ணாமலை மாட்டிக்கொண்டதாகவும் இடத்திற்கு ஏற்ற மாதிரி பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு எழுதிக் கொடுக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்

மேலும் அதிமுகவில் இருந்தபோது ஓபிஎஸ் எப்படி இருந்தார், ஆனால் இன்று பலாப்பழத்துடன் இருக்கிறார் என்றும், பலாப்பழம் பழுக்காமலே அழுகி போய்விடும் என்றும் அவர் தெரிவித்தார்

அண்ணாமலை மற்றும் மோடி குறித்து கடுமையாக விமர்சனம் செய்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments