Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது: அண்ணாமலை குறித்து செல்லூர் ராஜூ..!

Webdunia
வியாழன், 9 மார்ச் 2023 (12:42 IST)
உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அண்ணாமலை குறித்து பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை தான் ஜெயலலிதா, கருணாநிதி போல் ஒரு கட்சியின் தலைவர் என்று கூறியிருந்தார். இதற்கு அதிமுகவின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். 
 
ஜெயலலிதா ஈடு இணை இல்லாத தலைவர் என்றும் அவருக்கு இணையாக அண்ணாமலை தன்னை கூறிக்கொள்வது அர்த்தமற்றது என்றும் கூறியிருந்தனர். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இது குறித்து கூறிய போது ஊர் குருவி உயர உயர பறந்தாலும் பருந்தாகாது என்றும் அதேபோல் எவனாலும் ஜெயலலிதா போல் ஆக முடியாது என்றும் சிலர் 3 பட்டம் வாங்கி விட்டால் தன்னை பெரிய ஆள் என நினைத்துக் கொள்கிறார்கள் என்றும் தெரிவித்து கூறினார். 
 
மேலும் அண்ணாமலைக்கு வாய் அடக்கம் தேவை என்றும் ஒரு கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிகள் இணைவது என்பது இயல்பானது என்றும் பாஜகவினருக்கு அதை ஏற்க ஜீரண சக்தி இல்லை என்றும் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments