Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெங்குவை ஒழிக்க வாசலில் சாணம் தெளியுங்கள்: அமைச்சர் செல்லூர் ராஜூ

Advertiesment
dengu
, வியாழன், 12 அக்டோபர் 2017 (13:23 IST)
தமிழகம் முழுவதும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் டெங்குவை கட்டுப்படுத்த நிலவேம்பு கசாயம் உள்பட பல்வேறு வழிகள் பின்பற்றப்பட்டு வருகிறது.


 



இந்த நிலையில் இன்று மதுரையில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை  தொடங்கி வைத்த அமைச்சர் செல்லூர் ராஜூ, கொசுக்கள் வளரும் வகையில் தண்ணீர் தேங்கியுள்ளதா? என்று ஆய்வு செய்தார்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, ஒவ்வொரு வீட்டு வாசலிலும் சாணம் தெளித்தால் வீட்டில் டெங்கு கொசு உள்பட எந்த கொசுவும் வராது என்று அவர் கூறினார். வாசலில் சாணம் தெளிப்பது நகரங்களில் சாத்தியமில்லை என்றாலும் கிராமத்தினர் இதை கடைபிடிக்கலாம்' என்று கூறினார்.

சாணம் ஒரு கிருமி நாசினி என்பது உண்மைதான் என்றாலும் டெங்கு கொசுவை அது கட்டுப்படுத்துமா? என்பதை மருத்துவர்கள் தான் பொதுமக்களுக்கு விளக்க வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எடப்பாடி ஆட்சியில் அங்கீகாரம் இல்லையா? - ஓ.பி.எஸ் பரபரப்பு பேட்டி