Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”எல்லையில போயா சண்டை போட்டாங்க?” செல்லூர் ராஜு சர்ச்சைக்கு பேச்சுக்கு கண்டனம்! - முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டம்!

Prasanth Karthick
புதன், 14 மே 2025 (16:00 IST)

இந்தியா - பாகிஸ்தான் போரில் இந்திய ராணுவ வீரர்கள் குறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதற்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்தியா - பாகிஸ்தான் இடையே சமீபத்தில் போர் பதற்றம் உருவான நிலையில் பாகிஸ்தானை எதிர்த்து போரிடும் இந்திய வீரர்களை போற்றும் விதமாக சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி நடத்தப்பட்டது.

 

அதை விமர்சித்து அண்மையில் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ “ராணுவ வீரர்கள் என்ன எல்லையிலேயா சென்று சண்டை போட்டார்கள். போருக்கு தேவையான அதிநவீன ஆயுதங்கள், தொழில்நுட்பங்களை வாங்கிக் கொடுத்தது மத்திய அரசுதான். எனவே திமுக பிரதமர் மோடியைதான் பாராட்ட வேண்டும்” என பேசியிருந்தார்.

 

அவரது இந்த பேச்சுக்கு பெரும் கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில் செல்லூர் ராஜூ மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் ராணுவ வீரர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். செல்லூர் ராஜூவின் இந்த பேச்சை கண்டித்து இன்று கரூரில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் பலரும் திரண்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரவோடு இரவாக கரண்ட் பில் உயர்வு!? மருந்துக்குக் கூட மனிதாபிமானம் இல்லையா? - அன்புமணி கண்டனம்!

பட்டப்பகலில் நர்சிங் மாணவியை கழுத்தறுத்து கொன்ற காதலன்! - ஆஸ்பத்திரியில் அதிர்ச்சி சம்பவம்!

நான் சலுகை தரலைன்னா எலான் மஸ்க் ஆப்பிரிக்காவுக்கு ஓடியிருப்பார்! - மீண்டும் ட்ரம்ப் சீண்டல்!

பொம்மை முதல்வரின் தறிகெட்ட ஆட்சி.. அஜித்குமார் மரணம் குறித்து ஈபிஎஸ் ஆவேச அறிக்கை..!

இது கருணையற்ற கொலை! உணவில் விஷ மாத்திரை? - காசா மக்களை கொல்ல இஸ்ரேல் செய்த சதி!

அடுத்த கட்டுரையில்
Show comments